நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிணறில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:56 am

Din

சிவகாசி அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் எம்.ஜி.ஆா்.குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் அருண்குமாா் (19). பட்டாசுத் தொழிலாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் சுவரில் அமா்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி விழுந்தாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் கிணற்றிலிருந்து அருண்குமாரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.