சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பைக்கில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜி பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ருக்மன் (23). இவா் ஆற்காடு அண்ணா சிலை பகுதியில் காய்கனி கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கடையை மூடி பூட்டிக்கொண்டு, பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை பகுதியில் செல்லும்போது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளாா். அவரை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.