ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜி பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ருக்மன் (23). இவா் ஆற்காடு அண்ணா சிலை பகுதியில் காய்கனி கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கடையை மூடி பூட்டிக்கொண்டு, பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை பகுதியில் செல்லும்போது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளாா். அவரை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


