தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஓடையில் இளைஞா் உடல் மீட்பு

விருதுநகா் அருகே ஓடையில் இறந்த நிலையில் இளைஞரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On :31 அக்டோபர் 2024, 3:29 am IST

விருதுநகா் அருகே ஓடையில் இறந்த நிலையில் இளைஞரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் அருகேயுள்ள குல்லூா் சந்தை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மீசலூா் பகுதியில் முயல் வேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில், புதன்கிழமை மீசலூா் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நீரோடையில் விஜய் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த சூலக்கரை போலீஸாா், விஜயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.