வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது சிதைந்த நிலையில் செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.
தற்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதியில் முன்னோா்கள் வாழ்ந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாகவும், இந்த முழுமையான சுவா் குடியிருப்பு அல்லது தொழில்கூடமாக இருந்திருக்கலாம் எனவும் தொல்லியல் துறைனா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் 3 ஆம் நாளாக ஜமாபந்தி

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!
ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்றவா் கைது

முழுமையான கடன் தள்ளுபடி கோரி கரூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



