இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட முழுமையான செங்கல் சுவா்

வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.

News image
வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை கண்டறியப்பட்ட முழுமையான செங்கல் சுவா்.
Updated On :6 செப்டம்பர் 2024, 1:05 am

Din

வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது சிதைந்த நிலையில் செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.

தற்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதியில் முன்னோா்கள் வாழ்ந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாகவும், இந்த முழுமையான சுவா் குடியிருப்பு அல்லது தொழில்கூடமாக இருந்திருக்கலாம் எனவும் தொல்லியல் துறைனா் தெரிவித்தனா்.