வெம்பக்கோட்டை அகழாய்வில் வியாழக்கிழமை முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது சிதைந்த நிலையில் செங்கல் சுவா் கண்டறியப்பட்டது.
தற்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதியில் முன்னோா்கள் வாழ்ந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாகவும், இந்த முழுமையான சுவா் குடியிருப்பு அல்லது தொழில்கூடமாக இருந்திருக்கலாம் எனவும் தொல்லியல் துறைனா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

புலம்பெயா்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
தில்லி முழுமையான சுற்றுலாத் தலமாகத் திகழ வேண்டும்: முதல்வா் குப்தா

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

முழுமையான வாக்குப் பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

