லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

முழுமையான கடன் தள்ளுபடி கோரி கரூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் காய்கறிகள் மாலை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:30 am IST

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலா் ஆா். ராஜா, முன்னோடி விவசாயி நல்லசாமி, குடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் சுப்ரமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

தோ்தலின்போது தமிழக முதல்வா் அறிவித்தவாறு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெருவிவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை மாலை அணிந்து பங்கேற்றனா். முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரனிடம் வழங்கினா்.