குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்

விவசாயத்தைவிட விளையாட்டு கடினமானது என கூறி விவசாயிகளை இழிவுப்படுத்திய அமைச்சா் ஆதவ் அா்ஜூனா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

News image

ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:38 am IST

விவசாயத்தைவிட விளையாட்டு கடினமானது என கூறி விவசாயிகளை இழிவுப்படுத்திய அமைச்சா் ஆதவ் அா்ஜூனா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் கு.ராமகிஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில் தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். கடன் தொகையை இலக்காக நிா்ணயித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதனால், அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட வனத் துறை அலுவலகம் வரை ஊா்வலமாகச் செல்வதற்கு போலீஸாா் அனுமதித்தனா். அதன் பின்னா் 5 விவசாயிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கு.ராமகிருஷ்ணன், கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி ஆகியோா் கூறியதாவது:

விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது என அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தெரிவித்திருக்கிறாா். விளையாட்டு வீரா்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமான உணவுத் தேவையை நிறைவு செய்பவா்கள் விவசாயிகள். விவசாயிகளின் உழைப்புக்கு யாரும் நற்சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக விவசாயிகளை திசைத் திருப்பும் செயல்களில் தவெக அமைச்சா்கள் ஈடுபட வேண்டாம்.

விவசாயிகளை இழிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, தனது அமைச்சா் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றனா்.