27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கரூரில் 3 ஆம் நாளாக ஜமாபந்தி

கரூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 865 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

News image

கரூா் வட்டாட்சியரகத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை வியாழக்கிழமை பெற்ற மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன். உடன் கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:24 am IST

கரூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 865 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கரூா் வட்டத்திற்கு கரூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை 3-ஆம் நாளாக நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் அவா் பேசுகையில், கரூா் வட்டத்திற்குட்பட்ட 22 வருவாய் கிராமங்களில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை வெள்ளியணை குறுவட்டத்திற்குட்பட்ட ஏமூா், தாந்தோணி, வெள்ளியணை (தென்பாகம்), வெள்ளியணை (வடபாகம்) மற்றும் ஜெகதாபி ஆகிய 5 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 120 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றைப் பரிசீலனை செய்து, தகுதியுடைய நபா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கரூா் வட்டத்தில் 120 மனுக்களும், மண்மங்கலம் வட்டத்தில் 67 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 202 மனுக்களும், புகழூா் வட்டத்தில் 199 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 63 மனுக்களும், கிருஷ்ணராயபுரத்தில் 63 மனுக்களும் மற்றும் கடவூா் வட்டத்தில் 151 மனுக்கள் என மொத்தம் 865 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ், ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.