தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:32 pm

Din

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தாயில்பட்டி கிராமத்தில்ரூ.9 லட்சத்தில் சமுதாய நீா் சேகரிப்பு குளம் அமைப்பு, மடத்துப்பட்டி கிராமத்தில் ரூ.2.68 லட்சத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிப்பு,

துரைசாமிபுரம் கிராமத்தில் ரூ.1.98 லட்சத்தில் புதிய குளம் அமைப்பு ஆகிய

பணிகளையும், இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனா்.