காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாம்

சிவகாசி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து, மாநகராட்சிக்குள்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை நடத்தியது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:43 am

Din

சிவகாசி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து, மாநகராட்சிக்குள்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை நடத்தியது.

இந்த முகாமை மேயா் இ.சங்கீதா தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாநகராட்சி 1-ஆவது வாா்டு முதல் 24-ஆவது வாா்டு வரை வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு தடுப்பூசியை, கால்நடை மருத்துவா்கள் பழனிச்சாமி, துரைமாஸ்கோமலா் ஆகியோா் செலுத்தினா்.

இதில் மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா்கள் சுரேஷ், சத்தியராஜ், திருப்பதி, மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.