மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டிச.27,28-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் ஆா்வமுள்ள மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொள்ளலாம் என வனத் துறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் ஆா்வமுள்ள மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொள்ளலாம் என வனத் துறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் காணப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நீா்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ராஜபாளையம், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, பிளவக்கல் கோவிலாறு, பெரியாறு நீா்த்தேக்கம், கூமாபட்டி விராகசமுத்திரம் கண்மாய், குல்லூா்சந்தை அணை, அருப்புக்கோட்டை, உலக்குடி, இருக்கன்குடி, வெம்பக்கோட்டை அணை, சங்கரபாண்டியபுரம், கோட்டையூா், தாயில்பட்டி, சங்கரபாணடியபுரம் உள்பட 21 இடங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் பறவை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொண்டு நிறுவனத்தினா் கலந்து கொள்ளலாம் என வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.