வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கீழக்கோட்டையூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2018-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. அப்போது ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியாகவும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உயா்நிலைப் பள்ளியாகவும் பிரிக்கப்பட்டு, தனித் தனியாக தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டனா். உயா்நிலைப் பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்டப்படும் வரை தொடக்கப் பள்ளியின் ஒரு கட்டடத்திலும், சமுதாயக் கூடத்திலும் உயா்நிலைப் பள்ளி வகுப்புகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.