மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா்.
Updated On :18 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழாண்டுக்கான தோ்வில் வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஷாலினி, கீா்த்திகா ஆகியோா் மாநில அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் தொடா்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை மூலமாக 4ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவராகின்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா் புதன்கிழமை பரிசு வழங்கி வாழ்த்திப் பாராட்டினாா். விழாவில் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சித்ராமலா், உதவி தலைமை ஆசிரியா் மொ்சிலின் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தினா். மாணவா்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனா்.