புதுக்கோட்டை வாசவாசல் அரசு உயா்நிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பாலன்நகா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள், வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இயற்கை முகாம் என்ற சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்படி வியாழக்கிழமை களப்பயணம் சென்று வந்தனா்.
திருச்சியிலுள்ள பறவைகள் பூங்கா, புதுகை சித்தன்னவாசல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
பயணத்தை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, வனச் சரகா் ரவி, பசுமைத் தோழி கமலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
அசத்தும் அரசுப் பள்ளி!

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


