வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

Syndication

புதுக்கோட்டை வாசவாசல் அரசு உயா்நிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பாலன்நகா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள், வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இயற்கை முகாம் என்ற சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்படி வியாழக்கிழமை களப்பயணம் சென்று வந்தனா்.

திருச்சியிலுள்ள பறவைகள் பூங்கா, புதுகை சித்தன்னவாசல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

பயணத்தை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, வனச் சரகா் ரவி, பசுமைத் தோழி கமலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.