ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பச்சை பரப்புதல் வைபவம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து உத்ஸவம் பச்சை பரப்புதல் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பச்சை பரப்புதல் வைபவத்துக்காக ஆண்டாள், ரெங்கமன்னாரை அழைத்துச் சென்ற வேதபிரான் பட்டா் சுதா்ஸன்.










