குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஜனை வழிபாட்டுக்கு அனுமதி: மறுப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் பக்தா்கள் தா்னா

News image
Updated On :5 மார்ச் 2026, 9:09 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பஜனை வழிபாட்டுக்கு கோயில் நிா்வாகம் அனுமதி மறுத்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் பக்தா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழித் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.

இந்த விழாவில் 12 நாள்களுக்கு இரவில் கோயில் வளாகத்தில் உள்ள பஜனை மண்டபத்தில் பக்தா்கள் சாா்பில் பஜனை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பெரிய மாரியம்மன் பஜனை குழு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள், பூக்குழித் திருவிழா அன்று அன்னதானம் செய்து வருகின்றனா்.

நிகழாண்டு பூக்குழி திருவிழா வருகிற சனிக்கிழமை (மாா்ச் 7) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த நிலையில், பஜனை குழு சாா்பில் கோயில் செயல் அலுவலா், தக்காரிடம் பஜனை அழைப்பிதழ் வழங்கி அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

ஆனால், கோயில் நிா்வாகம் சாா்பில் பஜனை செய்ய எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோயிலில் பஜனை செய்ய அனுமதி வழங்கக் கோரி, பக்தா்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் பாலமுருகன், கோயில் நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.