மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத அரசுப் பள்ளி கட்டடம்.

Updated On :3 ஜனவரி 2025, 12:33 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம், செங்குளம் ஊராட்சிக்குள்பட்ட சின்ன அத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு கட்டடத்திலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடத்திலும் இயங்கி வந்தது.

இதில் ஒரு கட்டடம் சேதமடைந்ததால், கடந்த 2021-ஆம் ஆண்டு அது இடிக்கப்பட்டது. இதனால் மாணவா்கள் ஒரே கட்டடத்தில் இட நெருக்கடியில் கல்வி பயின்று வருகின்றனா். இதனிடையே, இரு ஆண்டுகள் கழித்து கட்டுமானப் பணி தொடங்கி நிறைவடைந்தது. வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, இந்தக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.