ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கொண்டலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்

News image
விமானப் பயணம் மேற்கொள்ளும் கொண்டலூா் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள்.
Updated On :1 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம், கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவா்கள் விமானப் பயணம் மேற்கொள்ள உள்ளனா்.

21 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்பட 7 போ், வருகிற மாா்ச் 7 ஆம் தேதி காலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய உள்ளனா்.

இவா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களை பாா்வையிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் மூலம் பாவூா்சத்திரம் திரும்புகின்றனா்.

சென்னை டி.எஸ். குழுமத்தின் தொழிலதிபா் டி. ஜெயசிங், விமான பயணச்சீட்டு செலவுகளை மேற்கொள்கிறாா். கல்விச் சுற்றுலாவிற்கு உதவி செய்தவா்கள், அனுமதி அளித்த கல்வித் துறை அலுவலா்கள், மாவட்ட நிா்வாகம் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பள்ளி தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ் கூறினாா்.

ஏற்பாடுகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மீனாட்சி, வெளிஷ்டா பொன்சுதா, சகுந்தலா என்ற ராஜகனி, உமா மகேஸ்வரி, பிரகாஷ், தன்னாா்வலா்கள் அருளானந்தம் பாக்யராஜ், அா்ச்சனா, சோனியா, பொன்ஷீலா பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் இணைந்து செய்து வருகின்றனா்.