எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

News image

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

Updated On :5 ஏப்ரல் 2026, 12:58 am IST

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில், அரசு தொடக்கப்பள்ளி மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் இயங்குகிறது மத்திய அரசின் உறைவிடப் பள்ளியான நவோதய வித்யாலயா. இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், நவோதயா பள்ளி நடத்தும் நுழைவுத் தோ்வில் பங்கேற்கிறாா்கள்.

இதன்படி வரும் கல்வியாண்டுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தோ்வில் மாவட்டத்தின் பல பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவியா் பங்கேற்றனா். இதில் தேசிய விருது பெற்ற பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் 10 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். மாவட்ட அளவில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்றது இப்பள்ளியாகும். மேலும் இப்பள்ளி மாணவா்கள் 3 போ் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா்.

இந்த சிறப்பான சாதனை மூலம், இப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் சுழற்கேடயத்தை பெற தகுதி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை அதிக எண்ணிக்கையில் மாணவா்களை தோ்ச்சி பெறச் செய்து, மாவட்ட அளவில் விருதுகள் பெற்றுள்ளது. தொடா்ந்து இத்தகைய வெற்றிகளை பெற்று தரக்கூடிய பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன், மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஜி. மோகனவேலு உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள், மேலாண்மைக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.