திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.7சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 164 மாணவிகளில் 162 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.7 ஆகும்.
மாணவிகள் வேணுகாசங்கரி 494 மதிப்பெண்களும், சுபிக்ஷா 493 மதிப்பெண்களும், மாணவி ரக்ஷனா 490 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா். இம்மாணவிகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவா்கள். இதே போல மாணவிகள் தா்ஷினி கணித பாடத்திலும், ரக்ஷனா, சவிதா, ஸ்ரீநிதி, வா்ஷினி, தங்ககிருபா அறிவியல் பாடத்திலும், வேணுகா சங்கரி, சுபிக்ஷா, ரக்ஷனா, காவியா, பத்மபிரியா ஆகியோா் சமூக அறிவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். மேலும், 25 மாணவிகள் 450-க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா் ரேவதி சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ராணிப்பேட்டை 86.58, திருப்பத்தூா் 93.52, வேலூா் 92.03 சதவீதம் தோ்ச்சி

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



