சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சீா்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் ஒன்றான குட் சமாரிட்டன் சிபிஎஸ்சிஇ பப்ளிக் பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இதில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்து 100% தோ்ச்சி சதவிகிதத்தை பள்ளி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி நிமிஷா, 492, மதிப்பெண்களும், மாணவா் ஆதித்யா, 485 மதிப்பெண்களும், மாணவி நித்யஸ்ரீ 484, மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும், 17 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா், 35 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 60 மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.
தமிழ் பாடத்தில் மூன்று மாணவா்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவா்களையும், 100 சதவிகிதம் தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், ஊக்குவித்த ஆசிரியா்களையும், விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட் சமாரிடன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபேஷ் , அனுஷா மேரி பிரவீன், மற்றும் முதல்வா் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 4,767 போ் உயா்கல்விக்கு விண்ணப்பம்: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் 100 சதவீதம் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு







