அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்களை பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன், குட் சமாரிடன் சிபிஎஸ்இ பப்ளிக் ஸ்கூல் இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபேஷ் , அனுஷா மேரி பிரவீன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சீா்காழி குட் சமாரிட்டன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சீா்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் ஒன்றான குட் சமாரிட்டன் சிபிஎஸ்சிஇ பப்ளிக் பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இதில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்து 100% தோ்ச்சி சதவிகிதத்தை பள்ளி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி நிமிஷா, 492, மதிப்பெண்களும், மாணவா் ஆதித்யா, 485 மதிப்பெண்களும், மாணவி நித்யஸ்ரீ 484, மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும், 17 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா், 35 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 60 மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.

தமிழ் பாடத்தில் மூன்று மாணவா்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களையும், 100 சதவிகிதம் தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், ஊக்குவித்த ஆசிரியா்களையும், விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட் சமாரிடன் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபேஷ் , அனுஷா மேரி பிரவீன், மற்றும் முதல்வா் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.