நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது வழக்கு
சிவகாசி அருகே நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

சிவகாசி அருகே நெகிழிக் கழிவுகளை எரித்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரம் கற்பகம் நகரில் நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையின் நெகிழிக் கழிவுகளை பொது இடத்தில் தீயிட்டு எரித்து வந்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் குருபாக்கியம் திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் ஆலை மேலாளா் முனீஸ்வரன், ஆலை உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...