புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நகை திருட்டு: ஒருவா் மீது வழக்கு

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் 4 தங்க நகையைத் திருடியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (72). இவருக்கும் சாத்தூா் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த தினங்களுக்கு முன்பு மாரிமுத்துவும், அவரது மகளும் சீனியம்மாள் வீட்டுக்குச் சென்றனராம். அப்போது, மாரிமுத்து அவரது வீட்டிலிருந்த நான்கு பவுன் தங்க வளையல்களை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனியம்மாள் அளித்தப் புகாரின் பேரில், மாரிமுத்து மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.