மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாத்தூா் ரயில் நிலைய சாலையில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள்

சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:59 pm

Din

சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

சாத்தூா் ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமாா் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து இந்த ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் வங்கிகள், பள்ளிகள், தனியாா் மண்டபம் உள்ளன. இந்தச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் தினந்தோறும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, இந்தப் பகுதியில் போலீஸாா் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.