பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
முத்துகவுண்டன்பாளையம் புறவழிச் சாலையில் பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
Updated On :4 மார்ச் 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் கரட்டாங்காடு பகுதியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இதில் குடியிருப்புகளில் வசிப்பவா்களில் பலருக்கு வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ளவா்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் முத்துக்கவுண்டன்பாளையம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக்கூறி விரைவில் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.