தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:59 pm

Din

சாத்தூா் அருகே சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்வோா்களுக்கு துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைக் கழிவுகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், இந்தப் பகுதி புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்,

இதேபோல, ஏழாயிரம்பண்ணை-இ.எல்.ரெட்டியபட்டி சாலை, சாத்தூா்- சடையம்பட்டி சாலையோரங்களிலும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

எனவே, சாலையோரங்களில் குப்பை கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.