மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை: நகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தல்

சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை: நகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தல்

News image

நாகை வெளிப்பாளையம் மகம் சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:57 pm

நாகை நகராட்சி வெளிப்பாளையம் மகம் சாலையில், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை நகராட்சி வெளிப்பாளையம் மகம் சாலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ரயில்வே தண்டவாளம் வரை சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையை ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், இந்த சாலையில் நாகை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்து மாசி மகத்துக்கு சுவாமிகள் கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சிலா் ஆக்கிரமித்து, குப்பைகளை கொட்டுவதும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனா். இறைச்சிக் கழிவுகளை உண்ணும் நாய்கள் அவற்கை சாலை முழுவதும் பரப்பி விடுகின்றன.

இதனால், அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, சாலையில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவோா் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.