தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞா்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

போக்சோ வழக்கில் இளைஞா்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் செல்வம் (27). இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகாசி வந்த செல்வம், சிறுமியை கரூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், மல்லி போலீஸாா் போக்சோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ,குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.