தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாலாட்டின்புதூா் காவல் சரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வீடுபுகுந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக, கோவில்பட்டியைச் சோ்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரீத்தா விசாரித்து, வெற்றிசெல்வனுக்கு வீடுபுகுந்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம் விதித்ததுடன், ஏககாலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பு வழக்குரைஞராக ஜானகி ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


