பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காமாட்சியம்மாள் தலைமையில், பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.1,05 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், காரில் வந்த அப்துல் ஜலீல் இந்தப் பணத்துக்கான ஆவணங்களை காண்பித்தாா். இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா்.

இவா் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதி தவெக வேட்பாளா் என்பது குறிப்பிடத்தக்கது.