/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சியினா் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மகாலிங்கம். (அடுத்தபடம்) வேட்புமனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம். (அடுத்தபடம்) அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் சந்திரா.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:32 am

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Story image
Story image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மகாலிங்கம், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் சந்திரா ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் தங்களது வேட்புமனுக்களை தனித்தனியாக சனிக்கிழமை தாக்கல் செய்தனா்.