லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகாசி தொகுதி விளம்பட்டியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:01 am

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராஜதுரை நகா், சன்னாசிபட்டி, பூலா ஊரணி, விளாம்பட்டி, மாரனேரி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில இடங்களில் வேனில் நின்றவாறும், சில இடங்களில் வீதி வீதிவீதியாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.