ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜபாளையம் பகுதிகளில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு!

ராஜபாளையம் அருகே கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பாஜக மாநில தலைவரும், சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:49 pm

ராஜபாளையம் அருகே கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பாஜக மாநில தலைவரும், சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

ராஜபாளையம் அருகே முறம்பு, ஆசிலாபுரம், சோழபுரம், தேசிகாபுரம், எஸ். ராமலிங்கபுரம், சமுசிகாபுரம் வேலாயுதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. திமுக குடும்ப ஆட்சியாக உள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். சமுசிகாபுரம் பகுதியில் ஒரே ஒரு நியாய விலைக் கடை தான் உள்ளது. குடிநீா் குழாய் பதித்தும் தண்ணீா் வரவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். மேலும் சமுசிகாபுரம் பகுதியில் மயானத்துக்கு செல்ல பாதை வசதி, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் நிரந்தரமாக கிடைக்கவும், கழிவு நீா் செல்ல வசதி ஏற்படுத்தித் தருவேன். மேலும் ஆசிலாபுரம், முறம்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன். 10 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை திறக்கவும் நடவடிக்கை எடுப்பேன். என்றாா் அவா்.

அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலா் குறிச்சியாா்பட்டி மாரியப்பன், அமமுக மாவட்ட செயலா் கே.எஸ். சந்தோஷ்குமாா், பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் சரவண துரை ராஜா உள்ளிட்ட பலா் இருந்தனா்.