அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

ராஜபாளையத்தில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் (தமமுக) பிரிசில்லா பாண்டியன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:58 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ் தலைமையில் தெற்கு நகரச் செயலா் பரமசிவம், வடக்கு நகரச் செயலா் முருகேசன், ராஜபாளையம் பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லிங்கம் தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் நகரச் செயலா் பி.கே.விஜயன், வழக்குரைஞா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையத்தை அடுத்த முகவூரில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் பரமேஸ்வரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையத்தை அடுத்த சேத்தூா் காமராஜா் நகரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வழக்குரைஞா் பகத்சிங் தலைமையில், அம்பேத்கரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது