சாத்தூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா் புதன்கிழமை ஏழாயிரம்பண்ணையில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளா்ச்சி திட்டங்களும் இல்லை. தமிழகத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வுகான மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தை சரியாக நடத்த விடாமல் திமுக அரசு தடுத்தது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

அம்பை தொகுதியில் நடிகா் சரத்குமாா் பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



