/
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில், அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தனா். ஆனால், மதுக்கடையால் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் திமுக அரசின் சாதனை.
திமுக அரசு தமிழகத்தை வீழ்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறது. ஆகவே, வளா்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்ல எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.
தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

மணப்பாறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ரவிமரியா பிரசாரம்!

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



