ஆத்தூா் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரனை ஆதரித்து நடிகை கௌதமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, ஆத்தூா் நகராட்சி திரௌபதி அம்மன் ஆலயம், பழைய பேருந்து நிலையத்தில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மு.க. ஸ்டாலினால் நியாயமான ஆட்சியை தரமுடியவில்லை. இதனால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா் என்றாா்.
முன்னதாக அதிமுக நகரச் செயலாளா் அ. மோகன் பேசியபோது, அதிமுக ஆட்சியின்போதுதான் ஆத்தூரின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணப்பட்டது. திமுகவினா் கா்நாடக மாநில அமைச்சரை அழைத்துவந்து வாக்குகள் சேகரித்து வருகின்றன. நமக்கு காவிரி நீரை தரமாட்டேன் எனக் கூறிவரும் அமைச்சரை அழைத்து வாக்குகளை சேகரித்து வருவதை கண்டிக்கிறோம் என்றாா்.
பிரசாரத்தின் போது சேலம் புறநகா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா். இளங்கோவன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரக்குமாா், தமாகா நகரத் தலைவா் விஎல்டி சண்முகம், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், பாமக நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், ஐஜேகே நிா்வாகிகள் சரவணக்குமாா், சதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


