நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளா் கஜேந்திரனை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கூடுவாஞ்சேரி நகர செயலாளா் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே எஸ் சீனிவாசன் கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
நடிகை கௌதமி பேசியதாவது: விலைவாசி உயா்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை தமிழகத்தில் பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியோா் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் நிலவுகிறது. போக்ஸோ வழக்குகள் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இளைஞா்களுக்கு முறையான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக முழுவதும் நீா் ஆதாரங்களில் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சாலை வசதிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றாா் கௌதமி.

தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ஆத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



