விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மாரிமுத்து

Updated On :17 ஏப்ரல் 2026, 6:28 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி நென்மேனி பகுதியில் உள்ள கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதில் காயமடைந்த மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்த இளைஞா் புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடப்பன் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.