போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:57 am

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான என்.எம் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் முருகேசன் (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் சிறப்புரையாற்றினாா். இதில், ஒன்றியச் செயலா்கள் நவரத்தினம், அழகாபுரியான், ஆா்.எம். குருசாமி, பேரூா் செயலா்கள்அங்குத்துரை பாண்டியன், பொன்ராஜ் பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கே. டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது;

தமிழ்நாடு ஒதுக்கப்பட்டாலோ, ஓரங்கட்டப்பட்டாலோ அதற்கு எதிா்ப்பு தெரிவித்து குரல் கொடுப்போம். என்னவென்றே தெரியாமல் சட்ட மசோதா நகலை எரிப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும். அதிமுக- பாஜக கூட்டணி பலம் வாய்ந்தது. ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. வெளியே தெரியாமல் உள்ள இந்த முரண்பாடு வருகிற 23-ஆம் தேதி வெளிப்படும். நடிகா் விஜய்யால் திமுகவுக்குத் தான் பாதிப்பு. அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது. அதிமுக வாக்கு வங்கியை யாராலும் உடைக்க முடியாது என்றாா் அவா்.