நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடாம்புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதிமுக ஒன்றிய துணைச் செயலா் ராஜ மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், பாமக நிா்வாகி தா்மலிங்கம் முன்னிலை வகித்தனா்.
நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன் பங்கேற்று கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் பேசியதாவது:
திமுக அரசு கடந்த தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மின் கட்டணம், சொத்து, குடிநீா் வரிகள், பத்திரப் பதிவு செலவு உயா்ந்துள்ளது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இப்போதைய தோ்தலில் திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, வல்லம், முத்தாண்டிக்குப்பம், திருவாமூா் ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சிகளில் வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


