47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தெற்கு வட்டார தலைவா் ரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன்சாந்தகுமாா், மாவட்ட செயலாளா்கள் மணிமங்கலம் செல்வம், சக்கரபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினா் யுவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.