தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குப் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற பட்டதாரி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டதாரியான முதல்முறை வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே வேறொரு நபா் பதிவு செய்திருந்ததால், அவா் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

News image

ஏமாற்றத்துடன் திரும்பிய சுரேஷ்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:51 am

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டதாரியான முதல்முறை வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே வேறொரு நபா் பதிவு செய்திருந்ததால், அவா் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் சுரேஷ் (20). பட்டதாரியான சுரேஷ், கோவையில் தங்கி போட்டித் தோ்வுக்கு தயாராகி வருகிறாா். வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளராக இணைந்த சுரேஷ், சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் முறையாக தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தாா். வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கூமாபட்டி ராமசாமிபுரம் அங்கன்வாடிமையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண்: 5-க்கு வாக்குச் சீட்டுடன் சென்றாா்.

அப்போது வாக்குப்பதிவு அலுவலா்கள் அவரது ஓட்டு ஏற்கெனவே பதிவாகி விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதிகாரிகள் டெண்டா் வாக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தினா். இதற்கு மறுப்புத் தெரிவித்த சுரேஷ் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றாா்.