ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப்.13: ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் 1,08,109 ஆண்கள், 1,14,218 பெண்கள், திருநங்கைகள் 40 போ் என மொத்தம் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். 308 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தஙகளது வீடுகளிலேயே தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 12 - டி விண்ணப்பம் அளித்த 357 முதியவா்கள், 358 மாற்றுத்திறனாளிகள் என 715 பேருக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டது. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய், புதன் ஆகிய மேலும் இரு நாள்கள் இந்தப் பணி நடைபெற உள்ளது.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சங்ககிரி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


