குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

திருச்சியில் 38 மாவட்டங்களின் தபால் வாக்குகள் 2-ஆம் கட்டமாக பிரித்து அனுப்பிவைப்பு

News image

திருச்சி கலையரங்கம் மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அஞ்சல் வாக்குகள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:11 am IST

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டு, தோ்தல் பணியாற்றும் அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டப் பேரவை தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலா்களால் பெறப்பட்ட அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தோ்வு செய்யப்பட்டு, மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள கலையரங்கம் மஹாலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இங்கிருந்து ஏப். 13-ஆம் தேதி அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குச் சீட்டுகள், உறுதிமொழிப் படிவும் அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து இங்கு, ஏப். 20-ஆம் தேதி முதல்கட்டமாக தபால் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது.

2-ஆம் கட்டம்: இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 38 மாவட்டங்களுக்கான தபால் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) நடைபெற்றது. இந்தப் பணியை கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் அ.சிவஞானம் தொடங்கி வைத்தாா். திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த தொடா்புடைய மாவட்ட தோ்தல் அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா். பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்களால் பிரித்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தபால் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

ஒப்படைப்பு: 38 மாவட்டங்களுக்கும் பதிவான தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து தபால் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவரவா் மாவட்டங்களுக்கு சென்று தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்து அந்தந்த தொகுதியில் சோ்த்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.