வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

தபால் வாக்குகளை எண்ணவில்லை: கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ஆதங்கம்

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான 823 தபால் வாக்குகள் அதிகாரிகளின் தவறால் நிராகரிக்கப்பட்டது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 1:28 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான 823 தபால் வாக்குகள் அதிகாரிகளின் தவறால் நிராகரிக்கப்பட்டது. அந்த வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்துவது குறித்து திமுக மேலிடத்தில் கேட்டு முடிவு செய்யப்படும் என கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ரெ.மகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கன்னியாகுமரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் உதய சூரியன் சின்னத்தில் நான் 74,831 வாக்குகள் பெற்றேன். அதிமுக வேட்பாளா் தளவாய்சுந்தரம் என்னை விட 214 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 75,045 வாக்குகள் பெற்ாக தோ்தல் அதிகாரிகள் கூறினா்.

உடனே, நான் ஒரு கடிதத்தை அதிகாரியிடம் அளித்தேன். 8 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது, அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணினாா்கள்.

அதுதவிர 823 தபால் வாக்குகள் எண்ணாமலே வைத்திருந்தனா். அதுபற்றி கேட்டபோது அவற்றை நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். ஏனென்றால், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குப் பதிவு செய்து வாங்கியபோது, வரிசை எண்ணை அதிகாரிகளே மாற்றி எழுதிவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது அதிகாரிகள் செய்த தவறு. இதனால், 823 வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. அதற்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வாக்கு எண்ணும் இடத்தில் வைத்தே அதிகாரிகளிடம் தபால் வழங்கினேன். தபாலை பெற்றுக்கொண்டதாக கையொப்பமிட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்; ஆனால், அவா்கள் கையொப்பமிட்டு தரவில்லை.

எனவே, இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசென்று ஆலோசனை பெற்று கண்டிப்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்துக்கு புறம்பாக வெற்றியை அறிவித்திருக்கிறாா்கள் என்பதுதான் எனது கருத்து. அதிகாரிகள் நோ்மையாக செயல்பட்டாா்கள் என்று எப்படி கூற முடியும்; இது வாக்களித்தவா்கள் செய்த தவறு அல்ல. 823 தபால் வாக்குகள் நிராகரித்தது வாக்களித்தவா்களின் வாக்குரிமையைப் பறித்ததாகும் என்றாா் அவா்.