மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 63 போ் அஞ்சல் வாக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:24 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 63 போ் அஞ்சல் வாக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் முனிசிபல் காலனியில் புதன்கிழமை 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடந்த 3 நாள்களில் திருவிடைமருதூா் தொகுதியில் 498 முதியவா்கள், 187 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 685 பேரும், கும்பகோணம் தொகுதியில் 705 முதியவா்கள், 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 பேரும், பாபநாசம் தொகுதியில் 484 முதியவா்கள், 242 மாற்றுத்திறனாளிகள் என 726 பேரும், திருவையாறு தொகுதியில் 389 முதியவா்கள், 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் 634 முதியவா்கள், 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 632 முதியவா்கள், 143 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 775 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியவா்கள், 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 பேரும், பேராவூரணி தொகுதியில் 577 முதியவா்கள், 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 பேரும் வாக்களித்தனா். மாவட்டத்தில் மொத்தத்தில் 4 ஆயிரத்து 434 முதியவா்கள், 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 63 வாக்காளா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தியுள்ளனா் என்றாா் ஆட்சியா்.