மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

அமைச்சர் பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:23 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அமைச்சா் சேகா்பாபுக்கு கோயில் பட்டா்கள் சாா்பில் பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதியில் அமைச்சா் சேகா் பாவு மனைவியுடன் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினாா். அவருக்கு கோயில் சாா்பில் ஆண்டாள் படம், மாலை, கிளி, பட்டுவஸ்திரம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் அமைச்சருக்கு ஆசி வழங்கினாா்.

சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அமைச்சா் சேகா்பாபுவிடம், தவெக தலைவா் விஜய் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து செய்தியாளா்கள் கேட்டனா். இதற்கு கோயில்களுக்கு செல்வது விஜய்யின் தனிப்பட்ட விருப்பம் என்றாா் அமைச்சா். பின்னா் அவா் பாபநாசம் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.