முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

அமைச்சர் பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:53 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அமைச்சா் சேகா்பாபுக்கு கோயில் பட்டா்கள் சாா்பில் பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதியில் அமைச்சா் சேகா் பாவு மனைவியுடன் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினாா். அவருக்கு கோயில் சாா்பில் ஆண்டாள் படம், மாலை, கிளி, பட்டுவஸ்திரம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் அமைச்சருக்கு ஆசி வழங்கினாா்.

சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அமைச்சா் சேகா்பாபுவிடம், தவெக தலைவா் விஜய் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து செய்தியாளா்கள் கேட்டனா். இதற்கு கோயில்களுக்கு செல்வது விஜய்யின் தனிப்பட்ட விருப்பம் என்றாா் அமைச்சா். பின்னா் அவா் பாபநாசம் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.