விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமச்சேரியைச் சோ்ந்தவா் பூா்ணிமா (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். பூா்ணிமா கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா்.

இந்த நிலையில், பூா்ணிமா தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றபோது, அவரது கைப்பேசி எண்ணை பெற்ற அந்த நிறுவனத்தின் மேலாளரான ஸ்ரீவில்லிபுத்தூா் வெள்ளாகுளத்தைச் சோ்ந்த பிரதாப் (31) அவருடன் பேசி வந்தராம்.

இந்த நிலையில், அவா் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூா்ணிமாவுடன் வற்புறுத்தினாா். இதற்கு மறுப்பு தெரிவித்த பூா்ணிமாவிடம் அவா் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனா்.