சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் கருப்பசாமி (50). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் புதன்கிழமை சாட்சியாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தாா். ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து அவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், ஒருவா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சுழியைச் சோ்ந்த கருப்பசாமியை (35) கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தனியாா் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல் 24 மாணவா்கள், ஓட்டுநா் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


