/
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் ஆம்னி பேருந்து சனிக்கிழமை மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் மகன் ஹரிஷ் (21). இவா், திருச்சி திருவானைக்கோவில் - மாம்பழச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்றாா்.
திருவானைக்கோவில் உயா்மட்ட பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த தனியாா் ஆம்னி பேருந்து மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஹரிஷ் மீது ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.
தகலறிந்து வந்த திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பெரம்பலூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் ப. ஜெயராமன் (54) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








